Monday, December 28, 2009

நாகரத்னா பதிப்பக புத்தகங்களை வாங்க...!!

வணக்கம் நண்பர்களே !

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

எனது கீதை - கட்டுரை
நடைபாதை - சிறுகதை
என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை
காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை

நன்றி,

Sunday, December 27, 2009

தினமலரில் நாகரத்னா நூல் வெளியிட்டு நிகழ்ச்சி !

27.12.2009 அன்று வெளியான தினமலரில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழாவை பற்றி செய்து வந்துள்ளது.

அதை கத்தரித்து கீழே குறிப்பிட்டுள்ளேன்.



நாகரத்னா நூல்கள் இணையத்தில் வாங்கும் வசதி விரைவில் அறிவிக்கப்படும்.

Saturday, December 26, 2009

புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது !

இன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

கிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.

காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.

நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Sunday, December 20, 2009

நாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா !

வரும் வெள்ளி (25.12.2009) அன்று, காலை 10.30 மணிக்கு, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு வெளியீட்டு நடைப்பெற உள்ளது.

தலைமை : திருமதி. கிரிஜா ராகவன்(ஆசிரியர், 'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழ் )

காந்தி வாழ்ந்த தேசம் - 50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு.

வெளியிடுபவர் : மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்)
பெறுபவர் : திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17)

தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு திரு.ஆதி('சிலந்தி' திரைப்பட இயக்குநர்) சான்றுகள் வழங்கவுள்ளார்.

குகன் எழுதிய
என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூல்

வெளியிடுபவர் : திருமது. கிரிஜா ராகவன்
பெறுபவர் : கவிஞர். கார்முகிலோன்
தொடர்ந்து நூல் பெறுபவர் : திரு. ஜே.ரமேஷ் ( உரிமையாளர், 'Bigtop Travels')

100 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.80/-க்கு கிடைக்கும்.

இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்
34, லேக்வியூ சாலை,
மேற்கு மாம்பலம், சென்னை-33,
(கிட்டு பாற்க் எதிரில், போஸ்டல் காலனி அருகில் )


அனைவரும் வருக.....!!

Tuesday, November 3, 2009

வருக...!

இது என் முதல் வலைப்பதிவு

அன்புடன்
குகன்