இன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
அண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.
கிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.
காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.
என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
விழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.
நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment